ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள்: ஜெ. துவக்குகிறார்
சென்னை:
தமிழ்நாடு தொழில்கல்வி நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை இன்டர்நெட்மூலம் பெறும் முறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
உலகிலேயே இவ்வாறு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகள் இன்டர்நெட் மூலம்வழங்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்று தேர்வை நடத்தவுள்ள அண்ணா பல்கலைக்கழகம்தெரிவித்துள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு சில ஆயிரம் பேரே நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால் இப்போது அதுலட்சக்கணக்காக மாறியுள்ளது. இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 36 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக செய்திவெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்டர்நெட் தளமான www.annauniv.edu உள்ளிட்ட சில தளங்களில் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அந்தவெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.