அமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் காட்டமான பதில்
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் எந்த விதத்திலும் மீறவில்லை என்றுஅமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் பதிலளித்துள்ளனர்.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே "தமிழ்நெட்" என்ற இன்டர்நெட் பத்திரிக்கைக்குவிடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகள் குறித்தும் விடுதலைப்புலிகள் அனைவருக்குமேதெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் ஈடுபடமாட்டார்கள்.
அப்படி யாராவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.
ஆனால் விடுதலைப்புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் ஆயுதக் கடத்தல் போன்றகுற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் எந்த வகையிலும் மீறவில்லை என்பதையும் நாங்கள் அமெரிக்காவுக்குத்தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
போர்நிறுத்த ஒப்பந்தம் எந்த அளவிற்கு அமலில் உள்ளது என்பதைக் கண்காணிப்பதற்காக சர்வதேசப்பார்வையாளர்கள் வந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற அறிக்கையை அமெரிக்காஎப்படி வெளியிட்டது என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனாலும் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படக் கூடாது என்பதில் அமெரிக்கா காட்டும் அக்கறையை நாங்கள்பாராட்டுகிறோம் என்று பாலசிங்கம் கூறினார்.