கைதிகள் தப்ப உதவிய 2வது நபர் சென்னையில் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை அருகே 2 அல்-உம்மா கைதிகள் தப்புவதற்கு உதவிய மற்றொரு முக்கிய தீவிரவாதியான நைனார் முகம்மதுநேற்று (புதன்கிழமை) இரவு சென்னையில் கைது செய்யப்பட்டான்.

திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும்2 அல் உம்மா கைதிகளான இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோரை டாடா சுமோ காரில் வந்த சிலர் கடத்திச்சென்றனர்.

அடுத்த 2 நாட்களிலேயே சிவகங்கையில் ஹைதர் அலியை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.இதற்கிடையே கைதிகள் தப்புவதற்கு உதவிய ஜஹவர் சாதிக் அலி என்ற ஐ.டி.ஐ. மாணவனையும் சமீபத்தில்போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை பெரம்பூரில் நைனார் முகம்மது என்பவனைப் போலீசார் கைது செய்தனர்.

கைதிகள் தப்புவதற்கு "மாஸ்டர் பிளான்" போட்டவனே இந்த நைனார் முகம்மதுதான் என்பது போலீசார்விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு அவனிடம் தீவிர விசாரணை நடத்துவதற்காக அவன் மதுரைகொண்டு செல்லப்பட்டான்.

இதற்கிடையே இமாம் அலியைப் பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+