For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை வந்தார் பாத்திமா பீவி.. ஓடிச் சென்று சந்தித்தார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திடீரென நேற்றிரவு சென்னை வந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் மாளிகையில்சென்று சந்தித்தார்.

சொந்த வேலை காரணமாக பாத்திமா பீவி வெள்ளிக்கிழமை சென்னை வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லத்தில்அவர் தங்கியிருந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று சந்தித்தார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து விவரம் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோது எம்.எல்.ஏ. ஆகாத ஜெயலலிதாவை முதல்வராக்கியவர் பாத்திா பீவி. இந்த விவகாரத்தில்மத்திய அரசுடன் கூட பாத்திமா பீவி மோதினார்.

பின்னர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனால்,அவரை பதவி விலகச் செய்தது மத்திய பா.ஜ.க. அரசு என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X