துப்பாக்கியுடன் திரிந்த சிறுவனால் சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை தியாகராய நகர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அலைந்த சிறுவன் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தினான். அவனை போலீஸார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தி.நகர் பர்கிட் சாலையில் வியாழக்கிழமை இரவு ஒரு சிறுவன் கைத் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த பொதுமக்கள்பீதியடைந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த சிறுவனைப் பிடித்துவிசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவனின் பெயர் மோகன் என்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பத்தை சேர்ந்தவன்என்றும் தெரிய வந்தது. மோகனின் தாயார் இந்திரா சென்னையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
மோகனை, திருவாரூரில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்துள்ளார் இந்திரா. அந்த வீட்டில் இருக்க மோகனுக்குப் பிடிக்கவில்லை. இந்தநிலையில், மோகனை, சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் திருவாரூர் வீட்டுக்காரர்.
சேலத்தில் காளியப்பன் என்பவரது வீட்டில் இருந்த மோகனுக்கு தனது தாயைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியுள்ளது. இதையடுத்துகாளியப்பன் வீட்டில் இருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அந்தப் பையில் கொஞ்சம் பணமும்,கைத்துப்பாக்கியும்,தோட்டாக்களும் இருந்தன.
துப்பாக்கியைப் பார்த்தும் அவனுக்கு அதை கீழே போட மனம் வரவில்லை. எனவே கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
மோகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி முறையான உரிமம் பெறப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும்துப்பாக்கியுடன் நடமாடியதால் மோகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவன் அனுப்பப்பட்டான்.