வீரப்பன் தலைக்கு ரூ.50 லட்சம்: மேட்டூரை மீண்டும் கலக்கும் போஸ்டர்கள்
மேட்டூர்:
மேட்டூர் பகுதியில் 3வது முறையாக மீண்டும் சந்தன கடத்தல் வீரப்பன் தலைக்கு விலை (ரூ.50 லட்சம்) நிர்ணயம்செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சந்தன கடத்தல் வீரப்பனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தமிழக, கர்நாடக அதிரடிப் போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவனை பிடிக்க முடியாமல் 15 ஆண்டுகளாக திணறி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வீரப்பனை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் அன்பளிப்பு அளிக்கப்படும் என்றுபோலீசார் அறிவித்தனர்.
பிறகு இரு அரசுகளும் சேர்ந்து வீரப்பன் தலைக்கு ரூ.1 கோடி விலை நிர்ணயம் செய்து, மேட்டூர் மற்றும்வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் போஸ்டர் ஒட்டின. ஆனால் யாரும் தகவல் கொடுப்பதாகதெரியவில்லை.
இந்நிலையில் வீரப்பனை பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சமும்,சேத்துக்குளி கோவிந்தனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.30 லட்சமும் கொடுப்பதாக மேட்டூரில் போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டரில் தகவல் கொடுக்க வேண்டிய தொலை பேசி எண், மற்றும் முகவரி ஆகியவையும்அச்சடிக்கப்பட்டுள்ளன.