For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை வழக்கு: மிசா பாண்டியன் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மதுரை மாநகர முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன் உள்பட 7பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மிசா பாண்டியனின் மைத்துனர் ராஜா மற்றும் மதுரை-ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் உள்பட 12 பேர்சேர்ந்து ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் ரூ.25,000 முதலீடு செய்திருந்தனர்.

கடந்த 1997ம் ஆண்டு இந்நிதி நிறுவனத்தின் மூலம் மனோகரன் என்பவருக்கு ரூ.1 லட்சம் ராஜா ஜாமீன்கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். ஆனால் மனோகரன் தன் கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை.

இதையடுத்து மனோகரனிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறும்படி ராஜாவை ஜெகதீசன் வற்புறுத்தியுள்ளார்.இவ்விஷயத்தை அப்போது துணை மேயராக இருந்த மிசா பாண்டியனிடம் ராஜா கூறினார்.

தன் மைத்துனர் ராஜாவிடம் பணம் கேட்கக் கூடாது என்று ஜெகதீசனிடம் மிசா பாண்டியன் எச்சரித்தார். இதனால்அவர்களிடையே முன் விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மாலை 4 மணிக்கு ஜெகதீசன் தன் அலுவலகத்தில்கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

மதுரை நகரையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்தக் கொலைச் சம்பவத்தில் மிசா பாண்டியனும் முக்கியக்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

ஜெகதீசன் கொலை தொடர்பாக அரிவாள் பாண்டி, வரிச்சியூர் செல்வம், பப்பி செல்வம், பாம்பன் ஆறுமுகம்,பைப்குமார் மற்றும் பாபு ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் தேடிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி செங்கல்பட்டுநீதிமன்றத்தில் மிசா பாண்டியன் சரணடைந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மிசா பாண்டியன், மீண்டும் மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டுகவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X