வி.எச்.பியின் "சாம்பல் யாத்திரை" திட்டம் வாபஸ்
அயோத்தி:
சபர்மதி ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டவர்களின் சாம்பலை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் ஊர்வலம்செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) இன்று (வெள்ளிக்கிழமை)கூறிவிட்டது.
அயோத்தியில் வி.எச்.பியின் பொதுச் செயலாளரான பிரவீண்பாய் தொகாடியா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்துக்களின் உரிமைகளைப் பறிப்பதில் சில மதச்சார்பற்ற கட்சிகளுக்கு என்னதான் சந்தோஷம் கிடைக்குமோஎன்று தெரியவில்லை.
காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்படும் இந்துக்களைப் பற்றியும் அவர்கள்கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இந்துக்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. தற்போது வி.எச்.பியால் மட்டுமேஇந்துக்களின் உரிமைகள் காக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் கைவசமுள்ள 67 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதுதான் எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை.இதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடுவோம் என்றார் தொகாடியா.
குஜராத் முதல்வர் வரவேற்பு:
இதற்கிடையே "சாம்பல் யாத்திரை" நடத்தப் போவதில்லை என்ற வி.எச்.பியின் முடிவை குஜராத் முதல்வரானநரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இந்துக்கள் ஹோலிப் பண்டிகையையும் முஸ்லீம்கள் மொகரம் பண்டிகையையும் விரைவில் கொண்டாடவிருக்கும்சூழ்நிலையில், தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் வி.எச்.பியின் இந்த முடிவால் மேலும் பரவாமல்தடுக்கப்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications