For Daily Alerts
Just In
இலங்கை: நார்வே குழுவினருடன் பிரபாகரன் பேச்சு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த முறையான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தையை நார்வே தூதுக் குழுவினருடன்விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடங்கினார்.
நேராக புலிகளின் வன்னிப் பகுதிக்கு விமானத்தில் சென்று இறங்கிய பாலசிங்கத்தையும் நார்வே குழுவினரையும்பிரபாகரன் வரவேற்றார்.
பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முறையான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து பிரபாகரனும்பாலசிங்கமும் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கான நார்வே தூதரக அதிகாரி ஜோன் வெஸ்ட்போர்க்,நார்வே தூதுக்குழுவைச் சேர்ந்த எரிக் சோல்ஹெம் ஆகியோருடன் பிரபாகரன் பேச்சு நடத்தினார்.
Comments
Story first published: Tuesday, March 26, 2002, 5:30 [IST]