இலங்கை அமைதி முயற்சி: இந்தியாவுடனும் பேச்சு
சென்னை:
இலங்கையில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முக்கியமான நடவடிக்கைகள் குறித்துஇந்தியாவுடனும் கலந்து ஆலோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நார்வே தூதுக்குழுவைச் சேர்ந்த எரிக்சோல்ஹைம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் கூறினார்.
இலங்கையில் விரைவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் அப்போதைக்கு அப்போதுஇந்தியாவிடம் நாங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா முழு மனதுடன் வரவேற்கிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை தூதுக்குழுவினராகிய நாங்களும் பேச்சுவார்த்தைக்கான பல முக்கிய அம்சங்கள் குறித்துஇந்தியாவின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம்.
பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டிருக்கவில்லை. எல்லாம் நல்லபடியாகவேபோய்க் கொண்டிருக்கிறது. வரும் மே மாதம் எப்படியும் அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கிவிடும்.
அடுத்த மாத மத்தியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் சந்திக்கவுள்ளேன்.அதற்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கான தேதி குறிக்கப்படும்.
இலங்கை அரசும் புலிகளும் தங்களது படைகளை தயார் நிலையில்தான் வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும்நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்களுடைய தற்போதைய குறிக்கோள் முழுவதும் பேச்சுவார்த்தைஅமைதியாக முடிய வேண்டும் என்பதில்தான் உள்ளது என்றார் சோல்ஹைம்.