குறைகிறது எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. கட்டணம்
டெல்லி:
எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுமுதல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைத்துள்ளது.
குறிப்பிடிட்ட தொலைவுகளுக்கான பல்ஸ் ரேட்டை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிகரித்துள்ளது.
வெளியூர் தொலைபேசி அழைப்பில் 50 கி.மீ.லிருந்து 200 கி.மீ. வரையிலான தொலைவுக்கு உட்பட்டஅழைப்புகளுக்கான பல்ஸ்ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான அழைப்பு ஒன்றுக்கு முன்னதாக ஒரு பல்ஸ் ரேட் என்பது 15 விநாடிகள். இது 18 விநாடிகளாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட இந்த கட்டணம் பகல் 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரைவசூலிக்கப்படும்.
ஐ.எஸ்.டி. தொலைபேசி அழைப்புகளில் சார்க் நாடுகள் உள்ளிட்ட இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு பல்ஸ்ரேட் 2.8 விநாடிகளில் இருந்து 3.3 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா, ஐரோப்பா, வளைகுடா, ஆசியா மற்றும் ஒசியானியா நாடுகளுக்கு 1.8 விநாடிகளிலிருந்து 2.3விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மேற்கு அரைவட்டத்தில் உள்ள நாடுகளுக்கும் பல்ஸ் ரேட்1.8 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆப் பீக் அவர்ஸ்சில் பல்ஸ் ரேட் 3.3லிருந்து 3.8 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.