காங்கிரசுடன் தமாகா இணைப்பா? - ஒரு நாள் பொறுங்க என்கிறார் வாசன்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவுடன் நாளை (திங்கள்கிழமை)தான் மனம் விட்டுப் பேசப் போவதாக தமாகா தலைவர் வாசன் கூறினார்.
திருச்சியில் இன்று நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
சென்னிதாலா நாளை சென்னை வரவுள்ளார். அவருடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து நான் பேசவுள்ளேன்.
காங்கிரசுடன் இணைவது குறித்தும் அவருடன் மனம் விட்டுப் பேசுவேன்.
தமாகாவிலிருந்து நீக்கப்பட்ட டாக்டர் குமாரதாஸ் மன்னிப்புக் கேட்டால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார் வாசன்.
காங்கிரசுடன் எப்போது இணைப்பு என்பது குறித்து கேட்டதற்கு, இன்னும் ஒருநாள் பொறுத்திருங்கள் என்றுவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications