சென்னையில் விரைவில் பெண் போலீஸ் கமாண்டோ படை
சென்னை:
சென்னையில் வெகு விரைவில் பெண் போலீஸ் கமாண்டோ படை அமைக்கப்பட உள்ளது என்று ஐ.ஜி. திலகவதிகூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெண் போலீஸ் பயிற்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐ.ஜி. திலகவதி, நிகழ்ச்சிமுடிந்தவுடன் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் கமாண்டோ படை தற்போது ஆண் போலீசில் மட்டுமேஉள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் பெண் கமாண்டோ படை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 50 பெண் போலீசாரைதேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் அவர்களுக்கு கமாண்டோ பயிற்சி தொடங்கும்.
முதல்வரின் ஆணையின் படி தற்போது பெண் போலீசுக்கு, புலனாய்வு செய்வது எப்படி என்பது பற்றியும்,துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெண் போலீஸ் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதுஎன்று திலகவதி கூறினார்.