காங்-தமாகா இணைப்பு பேச்சு தொடக்கம்
சென்னை:
தமாகாவை தங்கள் கட்சியுடன் இணைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்ரமேஷ் சென்னிதாலாவும் தமாகா தலைவர் வாசனும் இன்று (திங்கள்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நிருபர்களிடம் சென்னிதாலா கூறியதாவது:
தமிழக மக்களின் நலன் குறித்தும், காங்கிரசை பலப்படுத்துவதற்காகவும் எங்கள் கட்சியில் தமாகா இணையவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார்.
தமாகா நிறுவனரான மறைந்த மூப்பனார், நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசி. காங்கிரஸில் உள்ளவர்களுக்கு அவர்மீது தனி மரியாதை உண்டு.
இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இணைப்பு எப்போது என்பதைக் குறித்து கால நேரம்எதுவும் குறிக்கப்படவில்லை. இணைப்பு குறித்து தமாகாவினர் யோசிக்க சிறிது காலம் ஆகும் என்று சென்னிதாலாகூறினார்.
பேச்சுவார்த்தைக் குறித்து வாசன் கூறுகையில்:
இணைப்புக் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, தமாகா மூத்த தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள்,தொண்டர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இன்றைய பேச்சுவார்த்தை குறித்தும் அவர்களிடம்விவாதிக்க வேண்டும்.
மூப்பனார் அவர்கள், எப்போதும் தனது தலைவர் சோனியா காந்தி என்றே சொல்லிக் கொண்டிருப்பார்.
காங்கிரஸில் தமாகா இணைந்தால் கட்சியில் உள்ள அனைவரும் இணைவார்கள். ஏனென்றால் கட்சியில் உள்ளஅனைவரும் என்னுடன்தான் உள்ளனர் என்று வாசன் கூறினார்.