மதுரை சித்திரை திருவிழா நாளை தொடக்கம்
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (15ம் தேதி, திங்கள்கிழமை)மதுரையில் தொடங்குகிறது.
அருள்மிகு மீனாட்சி அம்மனின் திக் விஜயம், அதைத் தொடர்ந்து இறைவனையே கணவனாக அடைந்தது,பட்டாபிஷேகம் ஆகியவற்றின் தொகுப்பாகவே சித்திரைத் திருவிழா அமைந்துள்ளது. அத்தோடு, மீனாட்சிஅம்மனின் திருமணத்தைக் காண ஓடோடி வந்த அழகர், அவர் வருவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுவதால்கோபித்துக் கொண்டு வைகை ஆற்றில் இறங்குவது ஆகியவற்றையும் உள்ளடக்கியதே சித்திரைத் திருவிழா.
திருமலை நாயக்கருக்கு முன்பு வரை இந்த சித்திரைத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.திருமலை நாயக்கர்தான், மீனாட்சி-சுந்தரேஸ்வர் திருமண நிகழ்ச்சியையும், அழகர் ஆற்றில் இறங்குவதையும்ஒன்றிணைத்து, சைவத்தையும், வைணவத்தையும் கைகோர்க்கச் செய்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் 15ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. அதன் பின்னர்22ம் தேதி மதுரையின் அரசியாக மீனாட்சி முடிசூடிக் கொள்ளும் பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகுஒவ்வொரு நாடாக வெற்றி கொண்ட திக் விஜயம் 23ம் தேதி நடக்கிறது.
24ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குவரும் அனைத்துப் பெண்களுக்கும் மாங்கல்யக் கயிறு புதிதாக வழங்கப்படும். மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த திருமணமான பெண்கள் அனைவரும் தங்களது மாங்கல்யக் கயிற்றை மாற்றிக் கொள்வர்.
திருக்கல்யாணத்திற்குப் பிறகு 25ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். மதுரை நகரின் முக்கிய வீதிகளில் இந்ததேரோட்டம் நடக்கும்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் பெருமான், கள்ளழகர் கோலத்தில் வைகை ஆற்றில்இறங்கும் நிகழ்ச்சி 27ம் தேதி நடக்கிறது.
அதற்கு முன்பு மதுரை வரும் அழகரை மதுரை மாநகர மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி 26ம் தேதி மாலைநடக்கிறது.