திமுக, பிற கூட்டணிக் கட்சிகளுடன் நாயுடு ஆலோசனை
ஹைதராபாத்:
மதவாதத்தை ஆதரிக்கும் நரேந்திர மோடியை நீக்கும் விஷயத்தில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியகட்சிகளுடனும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று காலை தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்துக்கு முன் மூத்த தலைவர்களான எர்ரன் நாயுடு, தேவேந்திரகவுட் ஆகியோருடன் தனியே ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இது இன்று காலை வாஜ்பாயிடம்இருந்து நாயுடுவுக்கு வந்த 3வது தொலைபேசி அழைப்பாகும்.
அவரிடம் மீண்டும் தனது நிலையை நாயுடு விளக்கினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கட்சிகளான திமுக, திரிணமூல் காற்கிரஸ், லோக் சக்தி, ஐக்கியஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களுடனும் பேச்சு நடத்த நாயுடு பேசி வருகிறார்.
இக் கட்சிகளும் குஜராத்தில் தலைவிரித்தாடி வரும் வன்முறையையும், இந்த விவகாரத்தில் மத்திய-மாநிலஅரசுகளின் அலட்சியத்தையும் எதிர்த்து வருகின்றன.