மோடியை நீக்கியே ஆக வேண்டும்: நாயுடு பிடிவாதம்
ஹைதராபாத்:
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு வெளியேறுவது என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று ஆந்திரமுதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.
தனது கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முன் நிருபர்களிடம் பேசிய அவர்,
நரேந்திர மோடியை நீக்க வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கோரிக்கையை வைத்ததற்காகநான் வெட்கப்படவில்லை. தனி மனிதர்களைவிட நாடு முக்கியம்.
இன்று கட்சியினருடன் விவாதித்து முடிவெடுப்பேன் என்றார்.
எர்ரன் நாயுடு:
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான எர்ரன் நாயுடு கூறுகையில்,
பா.க.கவுக்கு ஆதரவை வாபஸ் வாங்குவது எங்களது கடைசி ஆயுதமாகத் தான் இருக்கும். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
எங்களுக்கு பதவிகளைவிட நாட்டின் மதசார்பின்மையைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். அதற்காகஎதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.