மகாராஷ்டிரா பஸ்சில் தீ: 50 பேர் உடல் கருகி சாவு
நாசிக்:
மகாராஷ்டிரா மாநில அரசுப் பஸ்சின் டீசல் டாங்கில் தீப்பிடித்ததையடுத்து, அந்த பஸ் முழுவதும் தீயில் எரிந்ததில்அதில் மாட்டிக் கொண்டு, 13 பெண்கள் உள்பட 50 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள காட்கி-பாட்டா என்ற இடத்தில் இந்தச் கோர சம்பவம் இன்று காலை 11 மணிக்குநிகழ்ந்தது. கன்னாட் என்ற இடத்திலிருந்து ஷிர்டியை நோக்கி இந்த பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ்சின் ஆக்சில் கம்பி திடீரென உடைந்து டீசல் டாங்கில் மோதிய வேகத்தில் அது உடனடியாகத் தீப்பிடித்துவிட்டது.
இறந்த 50 பேர்களில் பல பேர் அடையாளமே தெரியாத வகையில் கரிக் கட்டையாகிப் போய்விட்டனர்.
பஸ்களில் மொத்தம் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் இந்தப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் செல்லும் பஸ்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை எப்போதும் ஏற்றிக்கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்துசென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களும் வந்து மீட்புநடவடிக்கைகளுக்கு உதவினர்.