For Daily Alerts
Just In
கோவில் வருமானத்தைப் பெருக்க குழுக்கள்: காஞ்சி சுவாமிகள் வரவேற்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடப்பதைக் கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் காஞ்சிஜெயேந்திர சுவாமிகள் தலைமையில் இரண்டு குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழக அரசின் இந்தத் திட்டங்களை காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
இதுபோன்ற குழுக்களை அமைத்துள்ள தமிழக அரசின் உத்தரவை வரவேற்கிறேன்.
கோவில்களில் நித்ய பூஜை, குளம் மற்றும் கோயில் புனரமைப்பு பணிகள் ஆகியவை கோயிலுக்கு வரும்வருமானத்தை கொண்டு சரி செய்யப்படும். இதற்காக கோவிலின் வருமானத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிமடம் சார்பில் கிராமப்புறங்களில் உள்ள கம்ப்யூட்டர் வசதி கொண்ட பள்ளிகளுக்கு, சாப்ட்வேர்உபகரணங்கள் வழங்கப்படும் என்று கூறினார் சுவாமிகள்.
Story first published: Thursday, May 2, 2002, 5:30 [IST]