For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நக்கீரன்" நிருபரை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தைப் போலீஸ் காவலில் ஒப்படைக்க சத்தியமங்கலம் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்ரமணியம் வியாழக்கிழமைசத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிவசுப்ரமணியத்தை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு போலீஸ் தரப்பில்கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது சிவசுப்ரமணியம் கூறுகையில்,

ஏற்கனவே வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக இரண்டு முறை போலீஸ் காவலில்என்னை எடுத்தார்கள். அப்போதே எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டேன்.

இந்நிலையில் மீண்டும் என்னை போலீஸ் காவலில் அனுப்பினால், ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கில் போட்டுவிடுவார்கள். எனவே போலீஸ் காவலில் என்னை ஒப்படைக்கக் கூடாது என்று கோரினார்.

இதையடுத்து சிவசுப்ரமணியத்தை மீண்டும் போலீஸ் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து சிவசுப்ரமணியம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோயம்புத்தூர் மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X