நாகப் பாம்புக்கு ஏ.சி.
சென்னை:
சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நாகப் பாம்பின் அறை குளு குளு வசதிசெய்யப்பட்டுள்ளதாக பூங்கா இயக்குநிர் பி.சி. தியாகி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது கடுமையான வெயில் காலமாக இருக்கிறது. கோப்ரா என்று அழைக்கப்படும் நாகப் பாம்புகளால் இந்தவெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே உயிரியல் பூங்காவில், நாகப் பாம்புகள் அடைக்கப்பட்டுள்ள அறை குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பூங்காவில் பல்வேறு புதிய வகை விலங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்தசர்க்கஸ் நிறுவனங்களிடமிருந்து பிடிக்கப்பட்டவை இவை.
ஒட்டகச் சிவிங்கி, காட்டெருமை, மான், முதலைகள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டவை. மொத்தம் 39விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு புதிய விருந்தாளிகளாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
பூங்காவில் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 1 லட்சம்லிட்டர் தண்ணீர் பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாலாற்றிலிருந்து இந்த தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதனால் விலங்குகளுக்கு தண்ணீர்ப் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்றார் தியாகி.