குஜராத் கண்டன தீர்மானம்: ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் இன்று ராஜ்யசபாவில் மத்திய அரசின்ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அர்ஜூன் சிங் இந்தத் தீர்மானத்தை முன் மொழியஅன்று நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது.
பின்னர் மறுநாளும் தொடர்ந்த இந்த விவாதம், அன்றும் முடிவுக்கு வராமல் திங்கள்கிழமையான இன்றைக்கும்தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தொடர்ந்து ராஜ்யசபாவில் நடந்த குஜராத் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது பிரதமர்வாஜ்பாய் குறுக்கிட்டுப் பேசினார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து நீக்குவதால் மட்டும் அங்கு அமைதி ஏற்பட்டு விடும் என்றுகூற முடியாது என்று கூறிய வாஜ்பாய், மதக் கலவரம் எந்த வடிவில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்றுபேசினார்.
அரசியல் சட்டத்தின் 355வது பிரிவை குஜராத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமும் இப்போது அங்குஏற்பட்டிருக்கவில்லை என்றும் வாஜ்பாய் கூறினார்.
தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள விவாதங்களே குஜராத் அரசுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு நோட்டீஸ்மாதிரிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து குரல் ஓட்டெடுப்பு மூலம் எதிர்க் கட்சிகளின் தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேறியது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற உதவியதற்காக அவையின்தலைவரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ண காந்த் அனைவரையும் பாராட்டினார்.