11 ஆண்டுகளாக "எஸ்கேப்" ஆன குற்றவாளி கைது
சென்னை:
11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீசாரிடம் சிக்கினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கடந்த 11ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, சின்ன சீனிக் கோனார் என்பவருக்கும்,சுப்ரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சீனிக் கோனார் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுப்ரமணியன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சுப்ரமணியன் தலைமறைவாகி விட்டார்.
அதன் பிறகு அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாககூறப்பட்டது.
இந்நிலையில், சுப்ரமணியன் அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்துசுப்பிரமணியின் வீட்டைச் சுற்றி வளைத்த போலீசார், அங்கிருந்த சுப்ரமணியனைப் பிடித்து கைது செய்தனர்.
11 ஆண்டுகளாக சுதந்திரமாகத் திரிந்த இந்தக் குற்றவாளி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.