For Quick Alerts
For Daily Alerts
Just In
இடைத் தேர்தல்: இதுவரை 9 பேர் வேட்பு மனுத்தாக்கல்
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) 9 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 31ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
அதிமுக வேட்பாளர்கள் ராதாரவி (சைதாப்பேட்டை), பூவராகமூர்த்தி (அச்சிறுப்பாக்கம்), வடிவேலு(வாணியம்பாடி) ஆகியோர் உள்பட மொத்தம் 9 பேர் நேற்று தங்கள் மக்களைத் தாக்கல் செய்தனர்.
வரும் திங்கள்கிழமை (மே 13ம் தேதி) வேட்பு மனுதாக்கல் முடிவடைகிறது.
Comments
Story first published: Tuesday, May 7, 2002, 5:30 [IST]