வெற்றிகரமான 2வது ஆண்டு: அதிமுகவினர் கொண்டாட்டம்
சென்னை:
தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட்டு வரும் மே 13 ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடையும் நிலையில்,ஓராண்டு சாதனை விளக்கப் பொது கூட்டங்களை நடத்த முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே 10ம் தேதி தமிழக சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக அமோகமான வெற்றிபெற்று திமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
அப்போதைய தேர்தலின்போது போட்டியிட முடியாமல் எம்.எல்.ஏவாகக் கூட ஆகாமலிருந்த ஜெயலலிதா அதிமுகஎம்.எல்.ஏக்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரானார். அவசர அவசரமாக மே 14ம் தேதியேமுதல்வராகப் பதவியும் ஏற்றுவிட்டார்.
அதன்பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செப்டம்பர் 21ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்த ஜெயலலிதா,பின்னர் டான்சி வழக்கில் விடுதலையானதும் இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றிபெற்று, மார்ச் 2ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றதும், இடைப்பட்ட ஐந்து மாதமும் தற்போதையபொதுப்பணித்துறை அமைச்சரான பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததும் தனிக் கதை.
இந்நிலையில் வரும் மே 13ம் தேதியுடன் அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி முடிவடைகிறது. இந்த ஓராண்டில்அதிமுக ஆட்சி நடத்திய சாதனைகளைப் பற்றி விளக்க பொது கூட்டங்களை நடத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளாக விவசாயிகளுக்கு 311 கோடி ரூபாய்க்கு வசதிகள் செய்துதந்தது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு செய்த நலத்திட்ட உதவிகள், உயர்படிப்பு முடிக்கும் வரைஇலவச படிப்புதவி, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது, உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அமைத்ததுஉள்ளிட்ட பல திட்டங்களைக் குறிப்பிட்டு பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்குஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.