பகல் கொள்ளை அடிக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர்
சேலம்:
சேலத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வரி என்ற பெயரில் பெரும் கொள்ளை அடித்து வருகிறார்.
சேலம் போஸ் மைதானத்தில் நிறுத்தப்படும் சரக்கு வேன் மற்றும் மினி லாரிகளிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை அதிமுகபிரமுகர் ஏலத்தில் எடுத்தார்.
போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம், கண்காட்சி போன்றவை நடத்தும் நாட்கள் தவிர மற்ற நாட்களின் அங்கு நிறுத்தப்படும்நான்கு சக்கர வாகனங்கள் ஒவ்வொன்றிடமும் 5 ரூபாய் மட்டும் ஓராண்டுக்கு வசூலிக்கும் உரிமையை மாநகராட்சி ஏலம் விட்டது.அந்த ஏலம் அதிமுக பிரமுகர் பாலகிருஷ்ணனால் எடுக்கப்பட்டது.
இவர் நான்கு சக்கர வாகனங்களிடம் மட்டும் தான் வரி வசூல் செய்யலாம். ஆனால் தள்ளுவண்டிகளைக் கூட விடாமல் பணம்பறித்து வருகிறார். தள்ளுவண்டியில் மாட்டுக்றி, கோழிக்கறி, பொரி விற்க வரும் வியாபாரிகளிடம் 8 ரூபாயும், துணி விற்கவருபவர்களிடம் 10 ரூபாயும், பழக்கடைகளில் 20 ரூபாயும் தினப்படி வசூலித்து வருகிறார் இவர்.
இவருக்கு யார் இந்த அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. இதற்கு பில்லும் கொடுப்பது கிடையாது.
இது மட்டுமில்லாமல் அங்கு விற்க வரும் ஒவ்வொருவரிடமும், வரி என்று கூறி பணத்தை பிடுங்கி வருகின்றனர் இவரது கைக்கூலிகள். வண்டி கடைகள், புத்தக கடைகள், லாட்டரி சீட்டு, நுங்கு விற்பவர்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறுதினமும் ஆயிரக்கணக்கில் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வருகிறார்.
வரி கொடுக்க மறுக்கும் வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்யும் திறமையும் இந்தக் கும்பலிடம் உண்டு. இதுமட்டுமின்றி, தீபாவளிநேரத்தில் போடப்படும் திடீர் கடைகளில் 50 ரூபாயிலிருந்து 100ரூபாய் வரை வசூலித்துள்ளனர். தீபாவளி நேரத்தில் மட்டுமேஇவர்கள் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர்.
மேலும் ஒரு வருடத்திற்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். சென்ற வருடம் திமுகவினர் சம்பாதித்ததை விட இந்தவருடம் நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற போட்டியில் அதிமுகவினர் அதிக ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இது குறித்து பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு 66,000 ரூபாய்க்கு போன ஏலத்தை இந்த முறை 1,30,500ரூபாய்க்கு எடுத்துள்ளோம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ பணம் வாங்கவில்லை. எவ்வளவு கொடுக்க முடியும் என்றுகூறுகிறார்களோ அதை மட்டுமே வாங்குகிறோம் என்றார்.
இது பற்றி மாநகர கமிஷ்னர் பால்சாமியிடம் கேட்டபோது, ஏலதாரர்கள் குறித்து ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. 13ஆம் தேதிஅனைத்து ஏலதாரர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்படும். அதை மீறுபவர்களுக்கு குத்தகை உரிமை ரத்துசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் கணக்கில் காட்டாமல் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் இவர் மீது வருமான வரித்துறை, வணிக வரித்துறையினர்நடவடிக்கை எடுப்பார்களா?