முரசொலி மாறனின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு
சென்னை:
ஸ்டாலினைக் குறி வைத்து இரு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சன் டிவிக்குச் சொந்தமான கேபிள்டிவி நெட்வோர்கான சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் தான் சன் டிவியை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சுமங்கலி கேபிள்விஷன் என்ன நிறுவனமும் உள்ளது. இது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு சாட்டிலைட் தொடர்பு தரும்நிறுவனமாகும்.
சென்னையில் சுமங்கலி கேபிள் விஷன் தான் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. இவர்களுக்குப்போட்டியாக வந்த சில நிறுவனங்கள் திமுக ஆட்சியில் இருந்தபோது ஒடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டன.
இந் நிலையில் இப்போது சுமங்கலி கேபிள் விஷனுக்கு ஆப்பு வைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன.
கேபிள் டிவி, சினிமா, நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதா இன்றுசட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் இதனைத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை திமுக மற்றும் பா.ம.க. உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதை ஆரம்ப நிலையிலேயேஎதிர்ப்பதாக திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
கேபிள் டிவியைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக செயல்பட அனுமதிக்கும்வகையில் தான் சட்டம் உள்ளது. எனவே, இதைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கூறினார்.