காந்தி பெயரைக் காப்பாற்றிய குமரி அனந்தன்
சென்னை:
மக்களோடு மக்களாக கால் கடுக்க நின்று முதல்வரைப் பார்த்து மனு கொடுத்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தி பேரவை பொதுச் செயலாளருமான குமரி அனந்தன் நேற்று கோட்டைக்கு வந்தார். அங்குமுதல்வரிடம் மனு கொடுப்பதற்காக நின்றிருந்த பொதுமக்களோடு வரிசையில் நின்றார்.
நீண்ட நேரம் கழித்துத்தான் அவரது முறை வந்தது. அப்போது முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகி செண்பகராமனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், அவருக்கு சிலையும் அமைக்கவேண்டும், தியாகிகள் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை அவர்களது மனைவியருக்குவழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தது.
குமரி அனந்தன் வரிசையில் நின்று முதல்வரைப் பார்த்து ஒரு பொது நல மனு கொடுத்தது அங்கு வந்தவர்களுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது.