For Daily Alerts
Just In
ரயிலில் கிடந்த 13 கிலோ கஞ்சாப் பெட்டி
சென்னை:
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 13 கிலோ எடையுள்ள கஞ்சாப் பெட்டி கிடந்தது.
ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3-வது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது.
பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், ரயில் பெட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருபெட்டி கிடந்தது. அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
உடனே அந்தப் பெட்டியை ஊழியர்கள் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Saturday, May 11, 2002, 5:30 [IST]