இடைத் தேர்தல்: மத்திய படையின் பாதுகாப்பு கோருகிறது திமுக
சென்னை:
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் மத்திய ரிசர்வ்போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் இதுவரை நடந்த எல்லா இடைத் தேர்தல்களிலும் அதிமுகவினரும் குண்டர்களும் நுழைந்துஅடாவடி செய்துள்ளனர். பல தேர்தல்களில் வாக்குச் சாவடிகளில் போலீஸ் உதவியோடு அதிமுகவினர்சூறையாடினர்.
இந் நிலையில் இப்போது நடக்கவுள்ள இடைத் தேர்தலில் மத்திய படையை நிறுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
சைதாபேட்டையில் 10 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என சென்னை நகர போலீஸ் ஆணையர்அறிவித்துள்ளார். இது மக்களிடையே பயத்தை உண்டாக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு நடந்த தேர்தலின்போது அதிமுகவினருக்கு சாதகமாக போலீசார்அடாவடியாக நடந்து கொண்ட முறையை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஓட்டு போட வந்தவர்களை அதிமுகவினர் அடித்துவிரட்டி விட்டுவிட்டு அவர்களின் ஓட்டுகளைப் போட்டனர்.போலீசார் முன்னிலையிலேயே வாக்களிக்க வந்தவர்களை அடிப்பது, தேர்தல் அதிகாரியை மிரட்டுவது, வாக்குப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடுவது ஆகிய சம்பவங்கள் நடந்தன.
இப்போது இதே போலீசார் தான் தற்காலிக காவல் நிலையங்கள் அமைத்து பாதுகாப்புத் தர போகிறார்களாம்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை இருந்ததால் தான் ஆண்டிப்பட்டியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.எனவே, இந்த 3 தொகுதிகளிலும் சி.ஆர்.பி.எப். படையை நிறுத்த வேண்டும் என அன்பழகன் தனது கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.