இந்துக்களை மதிப்பவர் ஜெ.: ராமகோபாலன்
ஆம்பூர்:
இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்வரான ஜெயலலிதா சமமாக மதிக்கிறார் என்று இந்துமுன்னணித் தலைவரான ராம கோபாலன் கூறினார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத் கோத்ரா ரயிலில் இந்து பக்தர்கள் வந்த பெட்டிக்கு தீ வைத்ததை வன்மையாக கண்டித்தவர் ஜெயலலிதா.
இந்துக்களின் தீ மிதித்தல் போன்ற வேண்டுதல்களை கருணாநிதி கிண்டல் செய்து வருகிறார். ஆனால் ஜெயலலிதாஇந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறார்.
கோவில்களில் அன்னதானத் திட்டம், குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வி, 500 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தகாஞ்சி சுவாமிகளின் தலைமையில் குழு, கோவில் வருமானத்தை அதிகரிக்க குழு, கோவில்களில் அனைத்துவிளக்குகளும் எரிவதற்கான திட்டம் போன்ற பல திட்டங்களை ஜெயலலிதா தீட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பொடோ சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்துள்ளார். கோவில் சொத்துக்களைஆக்ரமிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்ற திட்டம் தீட்டி வருகிறார்.
கோவில்கள் சமுதாயத்தின் உயிர்நாடி மட்டுமல்ல. அவைதான் நீதிமன்றம், கல்விக்கூடம், கலைகளின்பாதுகாப்பிடம், மக்களை ஒருமைப்படுத்தும் மையம் எல்லாமே. கோவில்களை மதித்து முன்னேற்றுபவரேஉண்மையான மக்கள் தொண்டர்.
எனவே, உண்மையான மக்கள் தொண்டராகவே ஜெயலலிதா விளங்குகிறார் என்றார் ராமகோபாலன்.