மதுரையில் அழகிரியின் நாட்டாமை: நடிகர் பாண்டியன் ஆவேசம்
சென்னை:
மதுரையில் அழகிரி, சென்னையில் ஸ்டாலின் என நாட்டாமை செய்து வரும் திமுகவின் முகமூடியைக் கிழித்துசைதாப்பேட்டை தொகுதியில் நடிகர் ராதாரவி வெற்றி பெறுவார் என்று நடிகர் பாண்டியன் கூறியுள்ளார்.
திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தவர் நடிகர் பாண்டியன். சென்னை மேயர் ஸ்டாலின் கூடவே இருந்துவரும் தியாகு, சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நடிகர் குழுவில் பாண்டியனும் இடம் பெற்றிருந்தார்.
ஆனால் ராதாரவி மற்றும் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோரது அட்வைஸ் படி இப்போது அதிமுகவில் ஐக்கியமாகிஉள்ளார் பாண்டியன்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் ராதாரவியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாககூறியுள்ளார் பாண்டியன். இதுதொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில்,
மதுரையில் அழகிரி அட்டகாசம் செய்கிறார், சென்னைக்கும், தமிழகத்திற்கும் ஏகபோக உரிமை என்பது போலஸ்டாலினை வளர்த்து விட்டுக் கொண்டுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் குடும்பச் சொத்தாகி விட்டது திமுக.அது தொண்டர்களை மதிக்கும் கட்சியாக இப்போது இல்லை.
பேசாமல் அதிமுகவுக்கு வந்து விடு என்று ராதாரவியும், சந்திரனும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். எனதுமனைவியும் அதிமுகவில் சேர ஆலோசனை கூறினார். இதையடுத்தே அதிமுகவில் சேர்ந்தேன்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக ஜெயலலிதா திகழ்கிறார். அத்தனை பேரும் அவரைப்பாராட்டுகிறார்கள். எதிர்த்தவரை எல்லாம் ஜெயித்தவர் அவர். அவரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளேன்.ஆனாலும் கூட தாயுள்ளத்தோடு என்னை ஏற்றுக் கொண்டார்.
சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியின் முகமூடியைக் கிழித்தெறிவோம், அதிமுகவுக்கும், "அம்மா"வுக்கும்வெற்றி தேடித் தருவோம். நானும் சைதாப்பேட்டை உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்என்றார் பாண்டியன்.