காஷ்மீர் பிரச்சனையில் சந்திரிகா கருத்து: இந்தியா கோபம்
கொழும்பு:காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகருத்துத் தெரிவித்துள்ளதாக வந்துள்ள செய்திகளால் இந்தியா கடுப்படைந்துள்ளது.
மேலும் அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சனையில் நார்வே தலையிட்டு வருவது மாதிரி ஒரு நாடு இந்தவிவகாரத்தில் தலையிட வேண்டும். தெற்காசியாவில் இல்லாத ஒரு நாடு இந்தப் பிரச்சனையில் தலையிடவேண்டும் என்று சந்திரிகா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனையில் நீங்களே தலையிட்டு சமரசம் செய்ய முயல்வீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில்தரவில்லை.
இந்தச் செய்திகளால் இந்தியா எரிச்சலடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கேஇடம் இல்லை என்று இந்தியா தெளிவாகத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சந்திரிகாவின் ஆலோசகருமானலட்சுமண் கதிர்காமரிடம் கருத்துக் கேட்டபோது, இப்போது லண்டனில் உள்ள சந்திரிகாவிடம் கேட்டுவிட்டுப்பேசுவதாக பதிலளித்தார்.
தூதரகம் மூலம் இந்திய வெளியுறவுத்துறை இலங்கையிடம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.