நடு ரோட்டில் "குட்டிக்கரணம்": போலீசாருக்கு ஐ.ஜி. கொடுத்த நூதன தண்டனை
பாண்டிச்சேரி:
ஹெல்மட் அணியாத 4 பாண்டிச்சேரி போலீசார் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட வேண்டும் என்ற நூதனதண்டனை அளிக்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் உள்ள போலீசார் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மட் அணிந்திருக்கவேண்டும் என்று அம்மாநில ஐ.ஜி. சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை வில்லியனூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்றபோலீஸ்காரர் தலையில் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்த சிங்கின் கண்ணில் ஹெல்மட்அணியாமல் வந்து கொண்டிருந்த கோவிந்தராஜ் பட்டு விட்டார்.
இதையடுத்து பாண்டிச்சேரி நீதிமன்றம் அருகே கோவிந்தராஜை வருமாறு கூறினார் சிங். கோவிந்தராஜ் அங்குவந்து சேர்ந்ததும் அவர் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக சிங் அவரைக் கடுமையாகத்திட்டினார்.
அத்துடன் நில்லாமல் இதற்குத் தண்டனையாக கோவிந்தராஜ் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட வேண்டும்என்றும் சிங் கூறினார். உடனே கோவிந்தராஜும் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட்டார்.
இதே போல் சந்திரமோகன், முருகையன் மற்றும் ஆரோக்கியநாதன் ஆகியோரும் சிங்கின் பார்வையில் பல்வேறுஇடங்களில் மாட்டிக் கொண்டனர்.
அவர்களுக்கெல்லாம் ஸ்பாட்டிலேயே நடு ரோட்டில் குட்டிக்கரண தண்டனை கொடுத்தார் சிங். ஒவ்வொருபோலீஸ்காரரும் இதற்காக 10 முறை நடு ரோட்டில் குட்டிக்கரணம் போட்டனர்.
நடுரோட்டிலேயே போலீசாருக்கு வழங்கப்பட்ட இந்தக் குட்டிக்கரண தண்டனை, பாண்டிச்சேரி போலீசாரிடம்மட்டுமில்லாமல் அம்மாநில மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் பாண்டிச்சேரி போலீசார் ஹெல்மட் அணிந்து கொண்டு தான்செல்கின்றனர்.