For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிரபாகரனை பிடிக்கும் தீர்மானத்தால் பேச்சு பாதிக்கும்"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தால் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளஅமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம் என்று இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரப் ஹக்கீம்கூறினார்.

சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான இந்தியக் கட்சிகள் தொடர்ந்துகோரி வருகின்றன.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசும் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதனால் இலங்கையில் அடுத்த மாதம்நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மக்களின் வேதனை எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அவர்களால் இதை மன்னிக்க முடியாமல் போகும்பட்சத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறக்கவாவது செய்யலாமே.

புலிகள் முழு மனதுடன் தான் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்துள்ளனர். எனவே புலிகளுக்கு எதிரானதடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தான் தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன்.

ஆனால் எங்கள் நாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஒரு கட்சியிலும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வேறொருகட்சியிலும் இருப்பதால் தான் இந்தப் பிரச்சனை இன்னும் நீடித்துக் கொண்டே செல்கிறது என்றார் ஹக்கீம்.

6 மாதங்களில் தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து

இதற்கிடையே அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் தூத்துக்குடி நகருக்கும் இலங்கையின் தலைநகரானகொழும்புவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாளை டெல்லியில் இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றும் அவர்கூறினார்.

இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட வேறு பல இந்தியத் துறைமுகங்களுடனும் இலங்கை கப்பல்போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X