கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி விரையும் 5 போர்க் கப்பல்கள்
விசாகப்பட்டினம்:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் நாட்டின் கிழக்கு துறைமுகமான விசாகப்பட்டினத்திலிருந்து 5போர்க் கப்பல்கள் மேற்குப் பகுதியான குஜராத்தின் கட்ச் வளைகுடாவுக்கு விரைந்துள்ளன.
கட்ச் வளைகுடாவில் ஏற்கனவே ஏராளமான போர்க் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆகியவை தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில்விசாகப்பட்டினத்திலிருந்து 5 போர்க் கப்பல்கள் கட்ச் பகுதிக்கு விரைந்துள்ளன.
அடுத்த ஒரு வார காலத்திற்குள் அவை கட்ச் வளைகுடாவைச் சென்றடையும் என்று கடற்படை அதிகாரிகள்தெரிவித்தனர்.
1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போதும், 1999ல் நடந்த கார்கில் போரின் போதும் இது போலவேகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி போர்க் கப்பல்கள் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. அமைதிப் படையிலிருந்து பாக். வீரர்கள் வாபஸ்:
இதற்கிடையே சியாரா லியோன் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையிலிருந்து பாகிஸ்தான்வீரர்கள் அனைவரையும் திரும்ப வருமாறு பாகிஸ்தான் அழைத்துள்ளது.
இந்திய எல்லையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதால் தங்கள் படையினரைத் திரும்ப அழைத்துள்ளதாகபாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரான ரஷித் குரேஷி கூறினார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்குரேஷி தெரிவித்தார்.