For Daily Alerts
Just In
நீலகிரி: இடி தாக்கி 2 குழந்தைகள், 2 பெண்கள் சாவு
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று தாக்கிய பயங்கர இடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
கூடலூரில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கூடலூரில் உள்ள ஒரு வீட்டை இடி கடுமையாகத்தாக்கியது.
இதனால் அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் உடல் கருகி இறந்தனர். மேலும் ஆறு மாதக் குழந்தை ஒன்றும்பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் இந்த இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்காயம் மட்டும் அடைந்து உயிர் தப்பினார்.
இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் இருந்து 4 பேர் இடி தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Thursday, May 23, 2002, 5:30 [IST]