பாக். ராணுவம் பயங்கரத் தாக்குதல்: 3 இந்திய கிராமங்கள் நாசம்
ஜம்மூ:
நேற்று இரவு முதல் ஜம்மூ அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரமான மோர்ட்டர் ரககுண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியக் கிராமங்களில் உள்ள 70 வீடுகள் அடியோடு எரிந்து சாம்பலாயின.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவுகடுமையான தாக்குதலை நடத்தினர்.
மோர்ட்டர் ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் படையினர் கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தினர். இதில் ஜம்மூஅருகே உள்ள 3 கிராமங்களில் உள்ள 70 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் ஹரி நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாகிஸ்தானின் இந்த மோர்ட்டார் ரக குண்டுத்தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விடிய விடிய நடந்த இந்தத் தாக்குதலின் போது சுமார் 2,000முறை பாகிஸ்தான் படையினர் இந்த ரகக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
நேற்று பகல் நடந்த தாக்குதலில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டார்.
இந்த 50 கிராமங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும் கால்நடைகளையும்அங்கேயே விட்டு விட்டு பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்று விட்டனர்.
இதற்கிடையே மணிஹரி மற்றும் பாஞ்ச்கன் கிராமங்களில் உள்ள 20 வீடுகளும் பாகிஸ்தான் தாக்குதலால் எரிந்துகொண்டிருக்கின்றன.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்தியப் படையினரும் தற்போது பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வேறு சேத மதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை.