For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனைப் பிடிக்க காங்கிரஸ் தீர்மானம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக் கூட்டத்தின் போது மனித வெடிகுண்டு வெடித்ததில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் பிரபாகரன் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டார். கொலை நடந்த ஓரிரண்டுஆண்டுகள் வரை அவரை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட சிலகட்சிகள் கூறிக் கொண்டே இருந்தன.

ஆனால் நாளாக ஆக காங்கிரஸ் கட்சி கூட அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களைப்பிரபாகரன் சந்தித்தார். இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை, புலிகளுக்கு எதிரானதடைகள் உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு சுமார் 2 மணி நேரம் அவர் பேட்டியளித்தார்.

அப்போது ராஜிவ் கொலை பற்றி கேட்டபோது அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகக் கூறிய பிரபாகரன்இப்போதைக்கு அதைப் பற்றி மேலும் எதுவும் தான் பேச விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பிரபாகரனைக் கண்ட பல இந்தியக் கட்சிகள் மீண்டும் அவருக்குஎதிராக அறிக்கைகளை விட ஆரம்பித்தனர்.

புலிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு எதிரான தடையை மேலும் நீடிக்கவேண்டும் என்றும் கூறியதோடு நின்று விடாமல், பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரஇலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஆளும் அதிமுக அரசு தீர்மானம்கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அரசுநீட்டித்தது. இந்தத் தடை நீட்டிப்பிற்கு இந்தியாவின் ஆளும் பாஜக அரசின் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மட்டுமே எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒருநாள் கூட்டம் நடைபெற்றது. ராஜிவ்காந்தியின் மனைவியும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இந்தக் கூட்டத்தைத்துவக்கி வைத்தார்.

ராஜிவ் கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுஇந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும் இலங்கையின் ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் அங்கு இனப் பிரச்சனைக்கு முடிவு காண அந்நாட்டுஅரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X