For Daily Alerts
Just In
திருப்பதி கோவிலுக்கு நிலத்தை காணிக்கையளித்த மதுரை பக்தர்
திருப்பதி:
திருப்பதி கோவிலுக்கு மதுரை பக்தர் ஒருவர் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை காணிக்கையாக வழங்கவுள்ளார்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தலைமுடியிலிருந்துதங்க நகைகள் வரை காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்தியா தவிர வெளிநாடுகளிலிருந்தும் திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை பக்தர் ஒருவர் தன்னுடைய நிலத்தையே காணிக்கையாக வழங்க முன் வந்துள்ளார். மதுரைஅருகே உள்ள இந்த 2.11 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று தெரிகிறது.
இந்த நிலத்தின் உரிமையை அந்த பக்தரிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதிருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]