அவசரமாகக் கூடியது அணு சக்திக் கமிஷன்
கல்பாக்கம்:
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்திய அணு சக்திக் கமிஷனின் முக்கியக் கூட்டம் சென்னைக்குஅருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை குறித்தும் இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்புகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா, அணு சக்திக் கமிஷனின் தலைவர் காக்கோதார் உள்ளிட்ட பலஅதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இது ஒரு வழக்கமான கூட்டம் தான் என்ற போதிலும், அணு ஆயுதங்கள் வைத்துள்ள இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இக்கூட்டம்கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டம் முடிந்த கையோடு பிரதமர் வாஜ்பாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மணாலிக்குச் சென்றுஅவருடனும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் பிரஜேஷ் மிஷ்ரா ஆலோசனை நடத்தவுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.