For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை குறை கூறுவதா?: ரஷ்யா கோபம்

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யா நேரடியாகவேகூறியுள்ளது.

இப்போது தெற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனவும் ரஷ்யாகுற்றம்சாட்டியுள்ளது.

இப்போது ரஷ்யாவில் உள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்இருவரும் எல்லை பதற்றத்துக்கு பாகிஸ்தானோடு சேர்த்து இந்தியாவையும் குறை கூறினர்.

இதையடுத்து உடனே ரஷ்யா தனது நிலையைத் தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்யவெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவைக் குறை கூறுவது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வைத்துக் கொண்டே இந்தியாவுக்கு தனது முழு ஆதரவைரஷ்யா தெரிவித்துள்ளது இந்திய அரசு வட்டாரங்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

நேற்று காலின் பாவல் ரஷ்ய நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவையும் சேர்த்து குறை கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு நாட்டின் பாதுகாப்பை இன்னொரு நாடு கேலிக்குறியாக்கும்போது அந்த நாட்டை கண்டிக்காமல் விடக்கூடாது. இந் நிலையில் இந்தியாவின் நிலை எங்களுக்கு நன்றாகவே புரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜார்ஜ் புஷ்சும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்திய- பாகிஸ்தான் பதற்றம் குறித்தும்விவாதித்தனர். அப்போது பாகிஸ்தானை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் புடின் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்தியாவை பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டுடன் சமன்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது என புடின்கூறியதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருக்கு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதிகளை உருவாக்கி இந்தியாவுக்குள் அனுப்புவது, செசன்யதீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது, அல்-காய்தா கும்பலுக்கு உதவுவது என பாகிஸ்தான் செய்த எல்லாசெயல்களையும் புடின் சுட்டிக் காட்டினார்.

மேலும் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து வரும் தீவிரவாதிகளால் தான் போர்ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பாகிஸ்தான் அடக்கினால் என்ன? இந்தக் கும்பல்களுக்கும்அல்-காய்தாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முதலில் பாகிஸ்தான் அதை ஒப்புக் கொள்ள வேண்டும்எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா அமைச்சர் பேச்சு:

இதற்கிடையே எல்லை நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் சீனவெளியுறவுத்துறை அமைச்சர் தாங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தால் ஆசிய கண்டமே பாதிக்கப்படும் என சீன அமைச்சர்கூறியதாகத் தெரிகிறது. இந்தியா மிக வேகமாக முன்னேறி வரும் நாடு. இதை போர் பாதித்துவிடக் கூடாது.எனவே, இந்தியா இந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் சீன அமைச்சர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X