டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
டெல்லி:
ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள மணாலியில் ஓய்வெடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் தன் விடுமுறையைப்பாதியிலேயே ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பினார்.
மத்திய பாதுகாப்பு கேபினெட் கமிட்டியின் முக்கியக் கூட்டம் அவர் தலைமையில் அவருடைய வீட்டிலேயே இன்றுநடைபெறுகிறது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் நேற்றிரவு அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்துஇக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம் குறித்தும் பாகிஸ்தான் நடத்தி வரும் ஏவுகணைச் சோதனைகள்குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நாட்டின் உணவு கையிருப்பு, எரிபொருள் கையிருப்பு, பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் இதில்விவாதிக்கப்படும்.
உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங், பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, முப்படைத் தளபதிகள், ராணுவ உளவுப் பிரிவினர், ரா,ஐ.பி. உளவுப் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியா மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகிவருவதாக இன்று காலை பெர்னாண்டஸ் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வது பற்றி எந்தவிதமான உறுதியையும் முஷாரப்அளிக்கவில்லை என்றும் கூறிய பெர்னாண்டஸ், எல்லையிலிருந்து இந்திய ராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கானவாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 12ம் தேதி என்ன பேசினாரோ அதையேதான் மீண்டும் பேசியுள்ளார் முஷாரப். அவருடைய பேச்சில்எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை என்று அத்வானியும் இன்று கூறினார்.