கிரக நிலை சரியில்லை என்கிறார் காஞ்சி சுவாமிகள்
ஊட்டி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரக நிலைகள் சரியில்லாமல் இருப்பதால் போர் போன்ற சில விளைவுகளைசந்தித்தே ஆக வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
ஊட்டியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போது கிரக நிலைகள் அவ்வளவாகச் சரியில்லை. எனவே போர் போன்றசிற்சில விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அயோத்தி பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீடு இருக்கக் கூடாது. முஸ்லீம்களும், இந்துக்களும் மட்டுமேபேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது. மூன்றாவது நபர் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ இந்தப் பிரச்சினைமுடிந்து போயிருக்கும். விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் நம்பிக்கை உள்ளது.
ஒருவர் மதம் மாறுவது என்பது அவரது இஷ்டம். ஆனால் பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறுவது குற்றச் செயல்.அது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.