சைதையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 273 மின்னணுஇயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ளன.
சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 273 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்குபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுப்பியுள்ள 10 கம்பெனி ரிசர்வ் போலீசார் பெங்களூரிலிருந்து வந்துள்ளனர். இவர்கள்அனைவரும் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதியின் 198, 199, 202, 205, 206, 230, 252, 253, 254, 255 ஆகியஎண்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்அதிகாரிகள் கூறினர்.
சைதாப்பேட்டையில் மொத்தம் 2,47,974 வாக்காளர்கள் நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இவர்களில் 1,23,733 பேர் பெண்கள், 1,24,241 பேர் ஆண்கள்.