சொன்ன பேச்சை கணவர் கேட்காததால் பெண் தற்கொலை
சென்னை:
தனது பேச்சைக் கேட்காமல் கணவர் ஸ்கூட்டரை விற்றதால் கோபமுற்ற ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கன்னியம்மாள். மாணிக்கம் ஒருவரிடம்வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தனியாகத் தொழில் செய்யலாம் என்று எண்ணிய அவர் அதற்குத் தேவையான பணத்திற்காக தனதுஸ்கூட்டரை விற்க முடிவு செய்தார். ஆனால் கன்னியம்மாள் ஸ்கூட்டரை விற்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டு வேலைக்குச் சென்று விட்டார்.
ஆனால் யாரிடமும் கடன் வாங்க பிரியப்படாத மாணிக்கம், மனைவி திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்து ஸ்கூட்டரை விற்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய கன்னியம்மாளிடம் ஸ்கூட்டரை விற்று விட்டதாகஅவர் கூறினார்.
இதனால் கோபமடைந்த கன்னியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையைத் தன் உடல் மீது ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி உயிரிழந்தார்.