For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அச்சிறுப்பாக்கம்: மந்தமாய் தொடங்கி விறுவிறுப்பாய்...

By Staff
Google Oneindia Tamil News

அச்சிறுப்பாக்கம்:

அச்சிறுப்பாக்கத்தில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே தொடங்கியது.

காலை 10 மணி வரை வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தான்மக்கள் விறுவிறுப்பாய் வாக்களித்தனர்.

அதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான எல்லப்பன் ஆகியோர்இன்று காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டுப் போட்டனர்.

இத் தொகுதியில் கிராமப் பகுதி வாக்குச் சாவடிகள் தான் அதிகம். இங்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகஅளவில் வாக்களித்தனர். அச்சிறுப்பாக்கம், கடப்பாக்கம், வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் 7 வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு மீண்டும் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X