போலீஸ் துணையுடன் அதிமுகவினர் சரமாரி கள்ள ஓட்டு: கருணாநிதி புகார்
சென்னை:
போலீசாரின் துணையுடன் அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டு போட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
காலை 10 மணி வரை வாக்குப் பதிவு ஒழுங்காகத் தான் நடந்தது. அமைதியாகத் தான் நடந்தது. ஆனால், அதன்பின்னர் அதிமுகவினர் வன்முறையிலும் முறைகேடுகளிலும் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.
கிண்டி சரக தாசில்தார் வழங்கிய போலி ரேஷன் கார்டுகள், போலி ஜாதிச் சான்றிதழ்களைக் காட்டி பலர் ஓட்டுபோட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிமுகவினர் உதவி வருகின்றனர். இதை போலீசார் கண்டும் காணாமல்இருந்து வருகின்றனர்.
இது போன்ற (போலி சான்றிதழ்களைக் காட்டுகிறார்) சான்றிதழ்களை ஏராளமாக போலியாகத் தயாரித்துஅதிமுகவினர் வழங்கியுள்ளனர்.
இதைத் தட்டிக் கேட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்துஆளுநர் ராம்மோகன் ராவிடம் புகார் தரப்படும் என்றார் கருணாநிதி.