For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12 மணி வரை 30 சதவீத வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் இன்று நடந்து வரும் இடைத் தேர்தலின் போது நண்பகல் 12 மணி வரை சுமார் 30 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளிலும் இன்று காலை 8மணிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

அதிகாலை 7 மணிக்கெல்லாம் மக்கள் ஓட்டுப் போடுவதற்காக வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக நீண்ட வரிசைகளில்நின்று கொண்டிருந்தனர். பின்னர் சரியாக 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாகவும்அமைதியாகவும் நடந்து வருகிறது.

இந்த மூன்று தொகுதிகளில் முக்கியத் தொகுதியான சென்னை-சைதாப்பேட்டையில் வன்முறை ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக 10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இத்தொகுதியில் தேர்தல் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் வெகு விறுவிறுப்புடனும் நடந்துவருகிறது. நண்பகல் 12 மணியளவில் இங்கு மட்டும் 30 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல் வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் நண்பகல் வரை 25 சதவீதத்திற்கும் மேலானவாக்குகள் பதிவாகின.

இந்த மூன்று தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாகவும் இதுவரை எந்த விதமானஅசம்பாவிதச் சம்பவமும் ஏற்படவில்லை என்றும் தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X