For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத்தொடங்கியது.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலுமே இன்று காலை 7மணியிலிருந்தே பொது மக்கள் வாக்குச் சாவடிகளின் முன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் நேற்றே செய்து முடித்து விட்டதால்எந்தவிதமான ஆரம்ப நேர குழப்பமும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாகத் தொடங்கியது.

இன்று காலை சரியாக 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்துவருகிறது.

சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கும் இடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. அதே போல் அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவின் கூட்டணிக்கட்சியான பாமகவுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகள் காரணமாக இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 225 வாக்குச்சாவடிகள் பதற்றம்நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த வாக்குச் சாவடிகளில் எல்லாம் அதிகமான அளவில் ஆயுதமேந்திய போலீசார்பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ள ஓட்டுப் போடும் கும்பல்களைப் பிடிப்பதற்காகவே சிறப்புப் போலீசாரும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும்போடப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டுப் போட்டால் அவர்களுக்குக் குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையாவதுகிடைக்கும் என்று ஏற்கனவே தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.

மூன்று தொகுதிகளிலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகப் போலீசார் தவிரகூடுதலாக 7,500 சிறப்புப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும்10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் (திமுக), வாணியம்பாடி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல்லத்தீப் (இந்திய தேசிய லீக்) மற்றும் அச்சிறுப்பாக்கம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ. செல்வராஜ் (பாமக) ஆகியோர்இறந்ததைத் தொடர்ந்து இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 6,18,097 பேர் வாக்களிக்கவுள்ள இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 62 பேர் தேர்தல் களத்தில்உள்ளனர்.

இந்த மூன்று தொகுதிகளிலும் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2ல் முடிவுகள்:

இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது.

அன்று காலை 11 மணியளவில் முதல் சுற்று முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். பகல் 12 மணிக்கெல்லாம் வாக்குகள்முழுவதுமாக எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்து விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X